சம்பா : இமாச்சலப் பிரதேசத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பாதையில் வாகனங்கள் வழக்கம் போல சென்று கொண்டிருந்தன. அப்போது சிறிய கற்கள் மலையின் உச்சத்தில் இருந்து விழுந்து கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அடுத்த சில நொடிகளில் மலைச்சரிவில் இருந்து பெரிய பாறைகளும், காய்ந்த மணலுமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது அந்தச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, மலை முகடுகளில் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. சரியான நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அதிஷ்டவசமாக எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை.