டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி வழக்கறிஞர்கள் முறையிட்டதை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கை அவசரமாக விசாரிக்க வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டிருந்தார். இந்நிலையில் ஜனவரி 22க்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.