காசிமேட்டில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தை மூச்சுத்திணறி பலி: தாய் பாலூட்டியபோது நேர்ந்த பரிதாபம்!

சென்னை: காசிமேட்டில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தை, தாய் பாலூட்டியபோது மூச்சுத்திணறி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி செலஸ்டின். இவர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த செலஸ்டினுக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செலஸ்டின் குழந்தைக்கு பாலூட்டினார்.

பின்னர் தூங்க வைத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கி சரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், தாய் பாலூட்டியபோது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிறந்து 18 நாட்களே ஆன குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: