இலங்கை: இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் கூச்சல் குழப்பத்தை அடுத்து நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூச்சல் குழப்பத்தை அடுத்து இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.