சென்னை: தமிழகத்திலும், இந்திய அளவிலும் ஒரேநோக்குடன் துணை நிற்கும் தோழமை சக்திகளை அரவணைத்து களம் காண்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பொய்யான வாக்குறுதிகள் அளித்து மக்களை வஞ்சித்த பாஜக ஆட்சியை வீழ்த்திட சூளுரைப்போம் என்றும் ஸ்டாலின் கூறினார். மேலும் கலைஞரின் 100-வது நினைவு நாளில் அவர் வழியில் தொடர்ந்து செயலாற்றி தமிழுலகம் மகிழ வென்று காட்டுவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.