கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார். இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.