பைசாபாத், அலகாபாத் பெயரை மாற்ற உபி அமைச்சரவை ஒப்புதல்

லக்னோ:  உத்தரப்பிரதேசத்தில் பைசாபாத் மற்றும் அலகாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை மாற்ற மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி, அந்நகரங்களின் பெயர்கள் முறையே அயோத்தி, பிரயாக்ராஜ் என மாற்றப்படும் என்று அம்மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில், உபி மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நகரங்களில் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: