ஆக்ரா: தாயிடம் இருந்து பச்சிளம் குழந்தையை பறித்து சென்ற குரங்கு, குழந்தையை கடித்து கொன்றது. உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிறந்த 12 நாட்களே ஆன தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார். இதற்காக குழந்தையுடன் வெளியே அந்த இளம்பெண் அமர்ந்திருந்தபோது அங்கே வந்த குரங்கு ஒன்று எதிர்பாராதவிதமாக இளம்பெண்ணிடம் இருந்த குழந்தையை பறித்துகொண்டு தாவி ஓடியது. இளம்பெண் கூச்சலிட்டதை அடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் குரங்கை விரட்டி சென்றனர்.