அகமதாபாத்: மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து ஆணி, வளையல், மோதிரம் என 1.5 கிலோ எடையுள்ள பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் சீரடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா(40). மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இவர் நீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 31ம் தேதி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சங்கீதாவின் வயிறு அளவுக்கு அதிகமாக பெரிதாக காணப்பட்டதோடு, தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது வயிற்றில் குவியலாக உலோகப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சுமார் இரண்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.