சென்னை: படேலுக்கு பிரமாண்ட சிலை அமைத்தது, தேச தந்தை மகாத்மா காந்தியை அவமதிக்கும் செயல் என்று, திருமாவளவன் குற்றச்சாட்டி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் டிச.10ம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் ஆயத்த மாநாடு நடந்து வருகிறது. அதன்படி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் கலைவடிவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தமிழரசன், ஆதவன், ராஜ்குமார், தேவ அருள்பிரகாசம், திருமாதாசன், செந்தமிழன், மதிஆதவன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் வல்லரசு, புத்தேரி ஸ்டான்லி வரவேற்றனர். கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் பாலாஜி, மண்டல செயலாளர் விடுதலை செழியன், வழக்கறிஞர் அணி பார்வேந்தன் மற்றும் பொதினி வளவன், பாசறை செல்வராசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.