பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: “சமக தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சிட்லிங் மலைக்கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, தீபாவளி விடுமுறைக்காக இல்லம் திரும்பிய நிலையில், சதீஷ், ரமேஷ் ஆகிய இருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படவேண்டும்.

தண்டனைகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுமேயானால், வருங்காலத்தில் குற்றங்களை தடுப்பது பெரும் சவாலுக்குரிய செயலாகிவிடும். பெண்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும் குற்றவாளிகள் மீது சிறிதளவும் கருணை அளிக்காமல், குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் உடனடியான தூக்கு தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசும், மாநில அரசும் முன்வர வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: