எம்ஐடி உதவி பேராசிரியர் தற்கொலை

சென்னை : பிரபல எம்ஐடி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஒருவர் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேற்கு தாம்பரம், அம்பாள் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவரது மகன் வசந்தவாணன் (30). இவர், குரோம்பேட்டையில் உள்ள பிரபல அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி கேம்பசில் உதவி பேராசிரியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், வசந்தவாணன் சில வருடங்களாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சையும் எடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் மனஅழுத்தம் தாங்க முடியாமல் தவித்த அவர், பலரிடம் பேசுவதையே தவிர்த்து உள்ளார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வசந்தவாணன் அவரது வீட்டின் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: