சென்னை : பிரபல எம்ஐடி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஒருவர் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேற்கு தாம்பரம், அம்பாள் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவரது மகன் வசந்தவாணன் (30). இவர், குரோம்பேட்டையில் உள்ள பிரபல அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி கேம்பசில் உதவி பேராசிரியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், வசந்தவாணன் சில வருடங்களாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சையும் எடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.