சென்னை: மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் நேற்று சென்னையில் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜஸ்வந்த்சின் சுமன்பாய் பபோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.