முதல்வர் எடப்பாடியுடன் மத்திய அமைச்சர் திடீர் சந்திப்பு

சென்னை: மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் நேற்று சென்னையில் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜஸ்வந்த்சின் சுமன்பாய் பபோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பழங்குடியினர் அதிகம் உள்ள கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஏற்காடு மற்றும் கருமன்துறையில் ஏகலைவா மாதிரி இருப்பிட பள்ளிகள் துவங்க தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஆவன செய்வதாக மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சின் சுமன்பாய் உறுதி அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: