சென்னை: பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ.4.86 கோடி மதிப்புள்ள பல்வேறு இயந்திரங்களை அமைச்சர்கள் நேற்று வழங்கினர். பேரிடர் காலங்களில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூ.4.86 கோடி மதிப்பீட்டில் 200 மர அறுவை இயந்திரங்கள், 30 நீர் இறைக்கும் பம்புகள், 8 மீ உயரம் உள்ள மரக்கிளைகளை அகற்றும் 6 இயந்திரங்கள், 100 ஜெனரேட்டர்கள் உட்பட 336 நவீன இயந்திரங்கள் பேரிடர் மேலாண்மை நிதி மூலம் வாங்கப்பட்டது. இந்த இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கும் நிகழ்ச்சி ேநற்று கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இணைந்து இயந்திரங்கனை மாநகராட்சிக்கு வழங்கினர்.
தொடர்ந்து, பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய பல்வேறு துறைகளின் தொடர்பு எண்கள் மற்றும் முகவரி அடங்கிய மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் 2018 என்ற கையேட்டினை வெளியிட்டனர்.