6 அடி நீள பாம்புடன் விளையாடும் பெண்

துமகூரு: பெண் ஒருவர் 6 அடி நீள பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து விளையாடுவது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கொரட்டகெரே தாலுகா ஜெட்டி அக்ரஹாரா பகுதியைச் சேர்ந்தவர் சுசிலாம்மாள் (50). இவர் 6 அடி நீளத்தில் பாம்பு வளர்த்து வருகிறார். ஒரு குழந்தையைப் போலவே அதை வளர்த்து வருகிறார். பாம்புடன் விளையாடுவது, உணவளிப்பது என பாம்புடன் நேரத்தை செலவழிக்கிறார். இதைப் பார்த்து மக்களுக்கு பயம் ஏற்படும். எவ்வளவோ கூறியும் அவர் பாம்பை விடவில்லை. சிலர் பாம்பை கொல்வதற்கும் முயற்சி செய்துள்ளனர்.

இந்நிலையில் 6 அடி நீள பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொள்கிறார். இதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்குத் தான் பீதி ஏற்படுகிறது. புதிதாக பார்ப்பவர்களுக்கு பயமாக இருந்தாலும் ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு செல்கின்றனர். உள்ளூர்வாசிகள் பாம்பை வேறு இடத்தில் விடச்சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் என்ன செய்தாலும் பாம்பு சுசிலாம்மாளை விட்டு பிரிவதில்லை. வெளியில் உலவி விட்டு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து விடுகிறது. இந்த ‘‘பாம்பு பெண்’’ணின் செயல்பாடு ஜெட்டி அக்ரஹாரா பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: