தீக்காயமடைந்தவர்களின் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைக்கு சன் பவுண்டேஷன் 34 லட்சம் நிதி உதவி

தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை அளிப்பதற்காக சன் பவுண்டேஷன் 34 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்காக சன் பவுண்டேஷன் 34 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது.

இதற்கான காசோலையை, கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ராஜசபாபதியிடம் சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சன் பவுண்டேஷன் இதுவரை 54 கோடிக்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: