சென்னை: அந்தமானில் இருந்து கோ ஏர் பயணிகள் விமானம் நேற்று காலை 7.45 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டது. இதில், மும்பையை சேர்ந்த விஜய் குல்கர்னி (72), அவரது மனைவி ஆல்பா குல்கர்னி (62) உள்பட 152 பயணிகள் இருந்தனர். விமானம் காைல 9.30 மணியளவில் சென்னை வான்வெளியை கடந்து கொண்டிருந்தபோது, விஜய் குல்கர்னிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே விமானி, அருகில் இருந்த சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கி விமானம் தரை இறங்க அனுமதி கேட்டு அவசர அவசரமாக தரை இறக்கினார்.
அப்போது, விமான நிலைய ஓடு பாதை அருகே தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் விமானத்திற்குள் ஏறி விஜய் குல்கர்னியை பரிசோதித்த போது அவரது உயிர் பிரிந்தது தெரியவந்தது. விசாரணையில், விஜய் குல்கர்னி மற்றும் அவரது மனைவி அந்தமானுக்கு கடந்த ஒருவாரத்துக்கு முன்பு சுற்றுலா சென்றனர், பின்னர் மும்பைக்கு திரும்பும் போதுதான் இந்த திடீரென சோகம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா வந்த இடத்தில் கணவரை இழந்து தவித்த பெண்ணின் நிலை பார்ப்பவர்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி