பாலியல் வன்முறை பேரவையை கூட்ட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் அளவு அதிகரித்துள்ளது. ஆனால், தமிழக அரசோ முதல்வரோ, இது குறித்து ஓர் அறிக்கை கூட வெளியிடுவதில்லை.  அரசின் காவல்துறை, மருத்துவ துறையின் இதயமற்ற அணுகுமுறைக்கும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு இல்லாததற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்திட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உடனடியாக தமிழக முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: