பாரதிய ஜனதா ஆபத்தான கட்சியா? கேள்வியை ரஜினி சரியாக புரிந்து கொள்ளவில்லை: தமிழிசை பேட்டி

சென்னை: நடிகர் ரஜினி கேள்விகளை சரியாக உள்வாங்கி இருந்தால், சரியான பதிலை சொல்லி இருப்பார் என்று தமிழக பாஜ தலைவர் தமிழிசை கூறினார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நடிகர் ரஜினிகாந்த், விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது, கேள்விகளை அவர், சரியாக முழுமையாக உள்வாங்கவில்லை. அதனால்தான் அப்படி ஒரு தெளிவற்ற பதிலை கூறியிருக்கிறார். ராஜிவ் காந்தி கொலையில் 7 பேர் விடுதலை மற்றும் பாஜ சம்பந்தப்பட்ட கேள்விகளை சரியாக உள்வாங்கி இருந்தால், இதுபோன்ற பதிலை கூறி இருக்க மாட்டார். மீண்டும் ஒருமுறை இந்த கேள்விகளை கேட்டால், வேறுவிதமாக அவர் பதிலளிப்பார்.

மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு பண மதிப்பிழப்பு திட்டத்தை செயல்படுத்தியபோது, அதை முதன்முதலாக வரவேற்றவர் ரஜினி. மோடியின் செயலுக்கும் ஆதரவு தெரிவித்தார். ஆனால் அதே ரஜினி, தற்போது, அதை அமல்படுத்தியது சரியல்ல என்று மாற்றி கூறுகிறார். பணமதிப்பிழப்பு திட்டத்தால் இந்தியாவில் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. அதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள்தான், ஏதாவது குறை கூற வேண்டும் என்பதற்காக, அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறி கொண்டிருக்கின்றனர். தர்மபுரியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிகாரிகள், சரியாக செயல்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: