மாநில வளர்ச்சிக்காக மத்திய அமைச்சர்களை சந்திக்கிறோம்: ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

சென்னை: மாநில வளர்ச்சிக்காகத்தான் மத்திய அமைச்சர்களை சந்திக்கிறோம் என்று நடிகர் ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் கூறியுள்ளார். சென்னையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நடிகர் ரஜினியிடம் 7 பேர் விடுதலை குறித்து கேள்வி கேட்கும் போது, யார் அவர்கள் என்று கேள்வி கேட்டது அனைவர் நெஞ்சில் முள்ளை பாய்த்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆபத்தான கட்சி என்று நேற்று சொல்லிவிட்டு இன்று மாற்றி சொல்லி இருக்கிறார்.

மாநிலத்திற்கு தேவையான நிதி மற்றும் வளர்ச்சிக்காகத்தான் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறோம். மற்றபடி கட்சி பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நடிப்பில் வேண்டுமானால் ரஜினி ஹீரோவாக இருக்கலாம். 7 பேர் விடுதலை குறித்த அவரது பதிலை வைத்து மக்கள் அவரை ஹீரோவா? ஜீரோவா? என முடிவெடுத்து கொள்வார்கள் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: