திருவாரூர்: திருவாரூரில் இன்று நடைபெறும் சுவாமி சிலைகள் சோதனையின்போது சம்பந்தப்பட்ட கோயில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நேரில் ஆஜராகி சிலைகளை அடையாளம் காண்பிக்குமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த 650 கோயில்களின் சுமார் 3500 சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி 3ம் கட்ட சோதனையானது இன்று காலை 8 மணி அளவில் தொடங்குகிறது.