சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியை சேர்ந்த சிறுமி ராஜலட்சுமி கடந்த மாதம் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.இந்நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசி வருகிறார். எனவே அவர் நடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அவருக்கு மனநல சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது.