வக்கீல் நந்தினி தந்தையுடன் கைது

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை, மதுவிற்கு எதிராக போராடும் வக்கீல் நந்தினி, அவருடைய தந்தை ஆனந்தகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆனந்தகுமார் கூறுகையில், தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். மாணவியின் சாவுக்கு காரணமாக இருந்த, டிஎஸ்பி உட்பட போலீசார் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவம் மதுவால்தான் அதிகளவில் நடக்கிறது. இதனால் மதுக்கடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். இதையடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  நந்தினி மற்றும் ஆனந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: