விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அடிக்கடி உறவுக்கு அழைத்ததால், ஆத்திரத்தில் கணவனை எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அருப்புக்கோட்டை அருகேயுள்ள மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் - மகாலட்சுமி தம்பதியினருக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்களில் இருவருக்கு திருமணமான நிலையில், வீரபத்திரன் அவ்வூரிலேயே வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை வீரபத்திரன் தோட்டத்தில் உள்ள வீட்டில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதையறிந்த போலீசார், அங்கு சென்று விசாரித்தனர்.