விருதுநகரில் கணவனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த மனைவி கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அடிக்கடி உறவுக்கு அழைத்ததால், ஆத்திரத்தில் கணவனை எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அருப்புக்கோட்டை அருகேயுள்ள மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் - மகாலட்சுமி தம்பதியினருக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்களில் இருவருக்கு திருமணமான நிலையில், வீரபத்திரன் அவ்வூரிலேயே வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை வீரபத்திரன் தோட்டத்தில் உள்ள வீட்டில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதையறிந்த போலீசார், அங்கு சென்று விசாரித்தனர்.

அப்போது மகாலட்சுமி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், தீவிரமாக விசாரித்த போது, அடிக்கடி வீரபத்திரன் உறவுக்கு அழைத்தால், தூங்கிக் கொண்டிருந்த அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: