காஞ்சிபுரம் அருகே பாலியல் தொல்லை கொடுத்த போலி சாமியாரை கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. செய்யூரை அடுத்த ஓடியூர் கிராமத்தில் முகாமிட்டு ஸ்ரீதர் என்பவர் தன்னை சக்திவாய்ந்த சாமியார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பல்வேறு சித்து வேலைகளை செய்து வந்துள்ளார். இதனை பயன்படுத்தி அதே ஊரை சேர்ந்த இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்யூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கிராமமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஓடியூர் கிராமத்தை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் சாமியார் ஸ்ரீதரிடம் சென்றுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பூஜை நடத்தவேண்டும் என்று சொன்ன சாமியார் தனி அறையில் வைத்து பூஜை செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி வந்த பெண்கள் போலிசில் புகார் கொடுத்துள்ளனர். புகார் கொடுத்து இருவாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும் சாமியாரை கைது செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: