சென்னையில் மசாஜ் சென்டர், ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய டெய்லர் ரவி கைது

சென்னை: சென்னையில் மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய டெய்லர் ரவி என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் நீண்ட ஆண்டுகாலமாக மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த தனிப்படையினர், பாலியல் தொழிலில் மன்னனாக விளங்கும் டெய்லர் ரவியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குறிப்பாக அண்ணாநகரில் ஒரு பெண்ணை பொரியாக வைத்து இவரை கைது செய்துள்ளனர். டெய்லர் ரவியை கைது செய்த உடனேயே பல முக்கிய புள்ளிகள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் விசாரணை அதிகாரிக்கு தொடர்புகொண்டு அவரை கைது செய்யக்கூடாது, உடனடியாக ரவியை விடுவிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து டெய்லர் ரவியின் செல்போனை ஆய்வு செய்ததில் 15க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், இவருடன் தொடர்பில் இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நாள் மற்றும் முன்நாள் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் இதில் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், 2 உதவி ஆணையர்கள், 1 துணை ஆணையர் ஆகியோர் அடிக்கடி டெய்லர் ரவியை தொடர்புகொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெய்லர் ரவி போல மேலும் 4 பேர் இதே தொழிலை செய்து வருவதாகவும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் 60க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டும் காணாமல் இருப்பதற்காக விபச்சார தடுப்பு பிரிவினருக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுக்கு ஒரு அமைச்சரும், அவரது மகனும் பின்புலமாக இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு உரிய ஆதாரங்கள் கிடைத்த பிறகு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: