புதுடெல்லி: அயோத்தி அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது மேலும், வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தின் உரிமை தொடர்பாக த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கோரியிருந்தன. ஆனால், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.