புதுடெல்லி: மது போதையில் விமானத்தை ஓட்ட வந்த ஏர் இந்தியா நிறுவன விமானியின் உரிமம் 3 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் பறப்பதற்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தை விமானி ஏ.கே.கத்பாலியா ஓட்ட இருந்தார். வழக்கமாக விமானத்தை ஓட்டும் முன்பு விமானிகள் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்களா என்பதை அறிய போதை பரிசோதனை நடத்தப்படும். இதன்படி, விமானியிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.