சென்னை: கருணாநிதி மறைவுக்கு மும்பையில் நடந்த அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மான நகலை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்க அகில இந்திய நிர்வாகிகள் பங்கேற்ற அகில பாரத காரியகாரி மண்டல் கூட்டம் மும்பையில் கடந்த அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2 தேதிகளில் நடந்தது. இதில் நிர்வாகிகள் சர்சங் சலக், மோகன் ராவ் பகவத், சுரேஷ் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: மு.கருணாநிதி மறைவு அனைவருக்கும் வருத்தம் அளிக்கிறது. அவரது மறைவால் குடும்பத்தினர், நண்பர்கள், இயக்கத்தினர் மீளா துயரில் ஆழ்ந்துள்ளனர்.