காசா, சிட்டி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே உள்ள காசா எல்லையில் இஸ்ரேல் வீரர்களும், ஹமாஸ் படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் இஸ்ரேல் வீரர் ஒருவரும், பாலீஸ்தீனத்தை சேர்ந்த 6 பேரும் பலியாயினர். பாலஸ்தீன போராளிகளுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே காசா எல்லையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இதுவரை 3 போர்கள் நடந்துள்ளன. இரு தரப்பினர் இடையே கடந்த மார்ச் மாதம் மீண்டும் மோதல் வெடித்தது. இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 227 பேர் கொல்லப்பட்டனர். இதனால் 4வது முறையாக போர் ஏற்படும் என அச்சம் நிலவியது. அமைதி நடவடிக்கை காரணமாக காசா எல்லையில் கடந்த சில மாதங்களாக அமைதி நிலவியது. இந்நிலையில் காசா எல்லையில் கான் யூனிஸ் என்ற இடத்தில் இஸ்ரேல் வீரர்கள், தனியார் கார் ஒன்றில் ஊடுருவியதாக ஹமாஸ் படையினர் குற்றம் சாட்டினர்.