சென்னை: ஆவடி அடுத்த அயப்பாக்கம், அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சிவகுமார் (24). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இருவருக்கும் விழுப்புரம் அருகே மயிலம் முருகன் கோயிலில் வைத்து திருமணத்தை பெற்றோர்கள் நடத்தி வைத்தனர். பின்னர், புதுமணத்தம்பதி அயப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு மாலை வந்தனர். இந்நிலையில், ரகசிய தகவலின்பேரில் சென்னை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அக்சில்யா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.