உணவே விஷமானதால் 2 சிறுவர்கள் பலி : பாகிஸ்தானில் பிரபல உணவகத்திற்கு சீல்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் உள்ள பிரபல உணவகம் அரிசோனா கிரில் ரெஸ்டாரண்ட். இந்த பிரபல உணவகத்தில் ஒரு பெண்ணும், அவரது 2 மகன்களும் உணவருந்தியுள்ளனர். உணவருந்திய சிறிது நேரத்திலேயே 3 பேருக்கும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மூவருமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவப் பரிசோதனையில், அவர்கள் சாப்பிட்ட உணவே அவர்களுக்கு நஞ்சாக மாறியது கண்டறியப்பட்டது. இதனால் தான் மூவரது உடல்நலனும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிறுவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். அவர்களது தயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கெட்டுப்போன உணவை பரிமாறியதால் தான் சிறுவர்கள் உயிரிழந்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து அரிசோனா கிரில் ரெஸ்டாரண்ட்டிற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், குறிப்பிட்ட உணவகத்துக்கு  சீல் வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: