கோவை: குலூர் அருகே டாஸ்மார்க் ஊழியர்கள் வேலுச்சாமி, ஜெகதீஷ் ஆகியோரை தாக்கி ரூ.3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வேலுச்சாமி, ஜெகதீஷ் ஆகியோரை கத்தியால் குத்தியும், மிளகாய் பொடியை தூவியும் ரூ.3லட்சம் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.