லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப்பணி அடுத்த மாதம் தொடங்கும் விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டெல்லியில் அகில பாரத துறவியர் பேரவையின் இரண்டு நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள், நாடு முழுவதும் இருந்து பல்வேறு மடாதிபதிகள், துறவிகள் மற்றும் இந்து மத தலைவர்கள், இந்து கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் 2ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி பேசுகையில், ‘‘அயோத்தியில் அடுத்த மாதம் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும். இது இருதரப்பு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கட்டப்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் அதேசமயத்தில் பதிலுக்கு லக்னோவில் மசூதி கட்டித் தரப்படும். சட்டரீதியான பிரச்னைகளால் அதற்கு இடையூறு வந்தால் வன்முறை தலைவிரித்தாடும். இவ்வாறு அவர் கூறினார்.