புதுவை: பன்றிக்காய்ச்சல் அறிகுறியால் பாதிக்கப்பட்ட சுமார் 39 பேர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை இயக்கநர் ராமன் கூறியுள்ளார். கர்ப்பிணி பெண்களை பன்றிக்காய்ச்சல் எளிதாக தாக்கும் என்பதால், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார். புதுவையில் டெங்கு பாதிப்பு 5 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் கூறினார்.