திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்விற்காக திருச்சி வந்திருந்த முதல்வர் பழனிசாமி, இன்று காலை ரங்கநாதர் கோவிலுக்கு சென்றார்.  அப்போது மங்கள வாத்தியங்கள் முழங்க, பாசுரங்கள் பாடியபடி இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் முரளி உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு தங்கக் குடத்துடன்  பூரண கும்  மரியாதை வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பிரகாரத்திற்குள் சென்ற முதல்வர் அங்கிருந்த கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்களை வழங்கி அதனிடம் ஆசீர்வாதம் பெற்றார்.இதையடுத்து கருடாங்காரை வணங்கி பின்னர் ரங்கநாதரை முதல்வர் தரிசனம் செய்தார்.முதலமைச்சருடன் அமைச்சர்கள் வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்பிக்கள் குமார், ரத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் குறித்து அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சரிடம் கோவில் நிர்வாக அர்ச்சகர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: