நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூரில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வாகனம் ஒன்றை முந்தி செல்ல முயன்ற போது நெல்லை - தென்காசி சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.