மன அழுத்தத்தால் ஒரே வாரத்தில் 5 இங்கிலாந்து ராணுவ வீரர்கள் தற்கொலை

லண்டன்: இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அயர்லாந்து. ஆப்கானிஸ்தான், போஸ்னியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற இடங்களில் இருப்பவர்களை விட ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ளவர்களுக்கு அதிக அளவில் மனஅழுத்தம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. எனவே அதிக மன அழுத்தத்துடன் காணப்படும் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி, தேவையான விடுப்பு மற்றும் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராணுவ வீரர்களின் இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி அவர்களது உறவினர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: