சென்னை: மயிலாப்பூர் நொச்சிநகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பி பிளாக்கில் வசித்து வருபவர் லட்சுமி. இவரது மகன் விஜய்(எ)ரைடர் விஜய்(25). நேற்று இரவு சாந்தோம் சர்ச் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் பாபு என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது அவர்கள் மது அருந்தியதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்து தப்பிக்க மண்டபத்தில் இருந்து வெளியே ஓடிவந்த விஜயை அந்த கும்பல் உருட்டு கட்டை, மதுபாட்டிலால் குத்தியுள்ளனர். தப்பி சென்ற விஜயை துரத்திய கும்பல் சரமாரியாக தாக்கியது.