பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் பெயிண்டர் கைது

சென்னை:  மேல்மருவத்தூர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம், விவசாயி. இவருக்கு காயத்ரி என்ற மனைவியும் மகாலட்சுமி (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும் உள்ளனர். மகாலட்சுமி அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் நாகதாஸ்(39), கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறிஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமி தப்பிச் சென்று தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் மேல்மருவத்தூர் மகளிர் போலீசார் பெயிண்டர் நாகதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: