மதுரை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வைகோ அறிவுறுத்தி உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மீத்தேன் எடுக்க வேதாந்தா குழுமத்திற்கு 2 இடங்களை ஒதுக்கீடு செய்யும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். திருமுருகன் காந்தி மீதான தேச துரோக வழக்கானது, பாஜ அரசின் பாசிச போக்கை காட்டுகிறது.