சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ் (25). ஆயுதப்படை காவலர். இவரது மனைவி லட்சுமி (24). தம்பதிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 27ம் தேதி முதல் ஓட்டேரி மலையப்பன் தெருவில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், லட்சுமியின் தந்தை தனது மகள் சாவில் மர்ம இருப்பதாக அளித்த புகாரின்பேரில், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக விக்னேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.