தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22, 23ம் தேதிகளில் நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். இதுதொடர்பான வழக்குகள் சிபிசிஐடியில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளை ஒரே வழக்காக பதிவு செய்து சிபிஐ விசாரணையை துவக்கியது. விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி சரவணன், டிஎஸ்பி ரவி ஆகியோர் கடந்த 13ம் தேதி முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.