மேட்டூர்: கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 20,158 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 20,933 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 13 ஆயிரம் கனஅடியும், கிழக்கு,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் 104.47 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 104.92 அடியாக உயர்ந்தது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக இருந்தது.