மதுரை: வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மதுரையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. 32 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவினர் அனைத்து பகுதிகளிலும் தயாராக உள்ளனர். கடலோர மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். மதுரை மாவட்டத்தில் 27 இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபட 119 அலுவலர்கள்தயார் நிலையில் உள்ளனர்’’ என்றார்.