100 கிலோ குட்கா பறிமுதல்

வேளச்சேரி: சென்னை சாஸ்திரி நகர் போலீசார் பெசன்ட்நகர் பகுதிகளில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பெசன்ட் நகர் பேருந்து நிலையம்  அருகே சந்தேகப்படும் வகையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது, 100 கிலோ குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. உடனே, போலீசார் அவற்றை பறிமுதல் செய்து டிரைவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், திருநெல்வேலியை சேர்ந்த புருஷோத்தமன் (28) என்பதும், கடந்த 10 ஆண்டுக்கு முன் சென்னை வந்த புருஷோத்தமன் திருவான்மியூர் லட்சுமிபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பெட்டிக் கடை நடத்தி வந்தார். அதன் பிறகு காஞ்சிபுரம் மாவட்டம், கண்டிகை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடோனாக மாற்றி குட்கா பொருட்கள் பதுக்கி கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, புருஷோத்தமனை கைது செய்தனர். அவரிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: