தைவானில் ரயில் தடம் புரண்டு 22 பேர் பரிதாப சாவு

இலன் : தைவானில் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் பலியாகினர். தைவானில் வடகிழக்கு மாகாணமான இலனில் நேற்று மாலை விரைவு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள இந்த மார்க்கத்தில், 366 பயணிகளுடன் தாய்துங் நகரத்திற்கு சென்று கொண்டிருந்த புயுமா விரைவு ரயில், ஷின்மா ரயில் நிலையத்தில் தடம் புரண்டது.

இந்த விபத்தில் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். 132 பேர் காயமடைந்தனர். ஆனால், ரயிலுக்கு அடியில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 120 வீரர்களை தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் களமிறக்கி உள்ளது. இந்த விபத்திற்கு அதிபர் திசாய் இங் வென் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: