×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்கா திறந்து வைத்து இறகுபந்து விளையாடிய ஆந்திர துணை முதல்வர்

திருமலை: ஆந்திராவின் காக்கிநாடாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விவேகானந்தா  பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை  துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான சின்ன ராஜப்பா நேற்று முன்தினம் திறந்து வைத்து பார்வையிட்டார். இதையடுத்து, பூங்காவில் அமைக்கப்பட்ட இறகுபந்து  மைதானத்தில் இறகுபந்து போட்டியை  விளையாடி தொடங்கி வைத்தார். அப்போது இறகுபந்து விளையாட முயன்று தவறுதலாக கால் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர், சிறிது நேரம் ஓய்வு எடுத்து மீண்டும் தனது பணியை தொடங்கினார். துணை முதல்வர் கீழே விழுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : vice president ,park , Smart City, opened the park and played by AP Deputy Chief Minister
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!