‘பழைய ஓய்வூதிய திட்டம் வராதா?’

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்  திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கூறுவதா என்று முதல்வருக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கையைப் பெற்று அதனடிப்படையில் நடவடிக்கை  எடுப்பது தான் சரியானதாக இருக்கும்.

இன்று வரை குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே ஸ்ரீதர் குழு அறிக்கையைப் பெற்று அதனடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: