காங். தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக காங்கிரசில் மாவட்டம் வாரியாக பார்வையாளர்களை நியமித்து திருநாவுக்கரசர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை வடக்கு மாவட்டத்துக்கு காங்கிரஸ் துணை தலைவர் டி.எல்.சதாசிவலிங்கம், சென்னை தெற்கு-முன்னாள் எம்எல்ஏ பலராமன், சென்னை கிழக்கு- பொதுச்செயலாளர் சிரஞ்சீவி,சென்னை மேற்கு-துணை தலைவர் ஆர்.தாமோதரன், திருவள்ளூர் வடக்கு- பொதுச்செயலாளர் எம்.ஜோதி, திருவள்ளூர் மத்தி- பொதுச் செயலாளர் டி.செல்வம், திருவள்ளூர் தெற்கு- பொது செயலாளர் ஜி.கே.தாஸ், காஞ்சிபுரம் வடக்கு- செய்தி தொடர்பாளர் அமெரிக்கை வி.நாராயணன், காஞ்சிபுரம் தெற்கு- செய்தி தொடர்பாளர் சொர்ணா சேதுராமன், காஞ்சிபுரம் மேற்கு- செய்தி தொடர்பாளர் கே.ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.72 கட்சி மாவட்டங்களுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: